வியாழன், செப்டம்பர் 22, 2011

எண்ணெய் உள்இழுத்தல்

எண்ணெய் உள்இழுத்தல் (OIL PULLING) எனப்படும் எண்ணெய் மருத்துவம் இப்பொழுது அநேக இடங்களில் புகழ்பெற்று வருகிறது. எண்ணெயை வாயில் விட்டு சாதாரணமாக கொப்பளிப்பதுதானே என்று அலட்சியமாக இல்லாமல் தொடர்ந்து எண்ணெய் உள்இழுத்தலை எடுத்துக்கொள்பவர்களுக்கு அனைத்து நோய்களும் தீரும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது

இன்றைக்கு புகழ்பெற்று கொண்டு வரும் எண்ணெய் உள்இழுத்தலை நூற்றாண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் கண்டுபிடித்து பின்பற்றியுள்ளனர். இது அனைத்து நோய்களுக்கும் பாதுகாப்பான எளிய மருத்துவ முறையாக இருந்துள்ளது. பல்வகையான நுண்ணுயிரிகளுக்கும், கிருமிகளுக்கும் நமது வாய்தான் நாற்றங்காலாகி நமக்கு தீமை செய்கிறது. இந்த எண்ணெய் கொப்பளிப்பு அத்தகைய தீய, கொடிய கிருமிகளையும் நுண்ணுயிரிகளையும் அழித்து அதன் மூலமாக உடலில் நஞ்சு கலந்த வேதியியல் பொருட்களை வெளியேற்றுகிறது. இதனால் நமது உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களும் புத்துணர்வு பெறுகிறது.

எண்ணெய் உள்இழுத்தல் எடுத்துக்கொள்வது பற்றி தெலுங்கு நாளிதழான ஆந்திர ஜோதியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு நடத்தப்பட்டது. மூன்று ஆண்டுகளாக 1041 நபர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 927 நபர்களுக்கு நோய் குணமானது தெரியவந்தது. 758 நபர்களுக்கு கழுத்து மற்றும் உடல்வலி குணமாகியது. அலர்ஜி மற்றும் ஆஸ்துமா நோய்கள் 191 பேருக்கு சரியானது. தோல்நோய், அரிப்பு,கரும்படை, உள்ளிட்ட நோய்கள் குணமடைந்ததாக தெரிவித்திருந்தனர். மேலும், இதயநோய், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம்,நரம்பு தொடர்பான நோய்கள் குணமடைந்ததாக கருத்துகணிப்பில் தெரிவித்திருந்தனர்.

எண்ணெய் உள்இழுத்தலை எப்படி செய்வது?

காலையில் எழுந்து, வெறும் வயிற்றில், பல் துலக்கிய உடன் தூய்மை செய்யப்பட்ட நல்லெண்ணெயோ, ஆலிவ் எண்ணெயையோ, வேர்க்கடலை அல்லது சூரியகாந்தி எண்ணெயையோ, இரண்டு தேக்கரண்டி (10 மில்லி லிட்டர்) வாயில் விட்டுக்கொள்ள வேண்டும். பின்னர் ஓய்வாக அதனை வாய் முழுவதும் பற்களின் இடைவெளிகளுக்கிடையே ஊடுருவிச் செல்லுமாறும் கொப்பளிக்க வேண்டும். இப்படியே தொடர்ந்து 15 முதல் 20 நிமிடங்கள் வரை கொப்பளியுங்கள். முதலில் வாய் முழுவதும் வழு வழுவென்று எண்ணெயின் தன்மை இருக்கும். ஆனால், சில நிமிடங்களில் அந்த தன்மை மாறி வாயினுள் எளிதாக நகரும். 15-20 நிமிடங்களில் எண்ணெயில் தன்மை முற்றாக நீர்த்துப்போய், நுரைத்து, வெண்மையாகிவிடும். அப்போது அதனை உமிழ்ந்து விடுங்கள்.

விடியற்காலையே சிறந்தது

உமிழ்ந்த திரவம் வெள்ளையாக இல்லாது மஞ்சளாக இருந்தால், இன்னும் கொஞ்ச நேரம் கொப்பளிக்க வேண்டும். மீண்டும் எண்ணெய் ஊற்றி கொப்பளித்து விட்டு உமிழ்ந்ததும் வாயைக் கழுவி நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். இதனால், உடலுக்கு கேடு விளைவிக்கக் கூடிய கிருமிகள் எல்லாம் நீங்கள் உமிழ்ந்த நீர்மத்தில் முழுமையாக வெளியேற்றப் படுகின்றன. இந்த எளிய எண்ணெய் மருத்துவத்தைச் செய்வதற்கு விடியற்காலை நேரமே சிறந்தது.

நிரூபிக்கப்பட்ட உண்மை

நம் உடலில் ஏற்படக்கூடிய இரத்த அழுத்தம், இதய நோய், பார்க்கின்சன் நோய்கள், கல்லீரல் &  நுரையீரல்நோய் , புற்று நோய், பக்க வாதம், நரம்பு சம்பந்தமான நோய்கள், வெரிகோஸ் நாளம் (பொதுவாக கால்களில் காணப்படும் கணுப்புடைப்பு நாளம் அல்லது விரிவடைந்த நாளம்), வலிப்பு, மாதவிடாய் தொல்லைகள், மார்பக நோய்கள், கருப்பை தொடர்பான நோய்கள், முகப்பருக்கள், படை போன்ற எண்ணிலடங்கா நோய்களுக்கும் தொல்லைகளுக்கும் மிக எளிமையான மருத்துவக் கோட்பாடு ஒன்றினை மனித குலத்துக்கு தந்துள்ளனர் நம் முன்னோர்கள். இதனை அப்போதய சோவியத் ஒன்றியத்தைச் சேர்ந்த அறிஞர், டாக்டர் மெத்கராஷ் என்பவர் அறிவியல் முறைப்படி ஆய்வு நடத்தி மெய்ப்பித்துக் காட்டியுள்ளார்.

வலி நிவாரணி

தலைவலி என்பது கடுமையான தொந்தரவினை தரக்கூடியது. ஒற்றைத்தலைவலியானது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. தினமும் தவறாமல் ஆயில் புல்லிங் எடுத்துக்கொள்பவர்களை இந்த நோய்கள் தாக்குவதில்லை என்கின்றனர் மருத்துவர்கள்.

மூட்டு வலி, முழங்கால் வலி, பல் மற்றும் வாய் சம்பந்தமான நோய்கள், கண் காது மூக்கு சம்பந்தமான நோய்கள், வயிறு குடல் நோய்கள், மலச்சிக்கல், மூலம், தும்மல், சளி, களைப்பு, தூக்கமின்மை, ஆஸ்துமா, வாயுத்தொல்லை, ஒவ்வாமை (அலர்ஜி), போன்ற நோய்களை உடனடியாக குணப்படுத்தியுள்ளது.

நாளொன்றுக்கு மூன்று முறை

எண்ணெயை கொப்பளிக்க முடிந்த எவரும், எந்த வயதினரும் இதனை செய்யலாம். இதற்கு எந்த வித பத்தியமோ உணவுக் கட்டுப்பாடோ கிடையாது. எதாவது நோய்க்காக மாத்திரைகளை உட்கொள்பவராக இருந்தாலும் கவலை இல்லை. நீங்கள் அந்த மாத்திரைகளை தொடர்ந்து உட்கொள்ளலாம். நோயின் தன்மை குறைந்தால், மருந்தின் அளவையும் மருத்துவரின் ஆலோசனையோடு குறைத்துக் கொள்ளலாம்.

எண்ணெய் உள்இழுத்தலை  செய்யும் போது ஒவ்வாமையால் இருமல் ஏற்பட்டால், உடனே வேறு நிறுவனத்தின் எண்ணெய்க்கு மாற்றிவிடலாம். இதைச் செய்யும் பொழுது தவறுதலாக அதனை விழுங்கி விட்டாலும் பயப்பட வேண்டாம். வயிற்றுப்போக்கு அல்லது வாந்தி தவிர வேறொன்றும் நேராது! விரைவில் நிவாரணம் வேண்டுவோர், நாளொன்றுக்கு மூன்று முறை செய்யலாம். ஆனால், வெற்று வயிற்றுடன் தான் இதைச் செய்ய வேண்டுமென்பது விதி.

இந்த மருத்துவத்தை செய்ய ஆரம்பித்ததும், சிலருக்கு, நோயின் தன்மை சற்று அதிகரித்து பின்னர் குறைகிறது. இது நெடுநாளாய் வாட்டும் நோய் குணமாகப் போகிறது என்பதின் அறிகுறி. இந்த எளிய மருத்துவ முறையை பின் பற்றுவதோடு சுத்தமான காற்றை சுவாசித்து, நிறைய நீர் பருகி, அளவான சுகாதாரமான உணவுகளை உட்கொண்டு நல்ல முறையில் உடற்பயிற்சி செய்து வந்தால் , நம் முன்னோர்கள் போன்று நோயற்ற வாழ்வு வாழலாம்.

மின்னஞ்சலில் வந்தது
கலைச்சொல்லுக்கு விக்சனரியை பார்க்கவும்.

திங்கள், ஆகஸ்ட் 01, 2011

சளி தொல்லையில் இருந்து விடுபட

சளி பிடிக்காத மனிதனே இல்லை. குறிப்பா பருவக்கால மாற்றங்களின் போது (அதாவது கோடை காலம் <-> குளிர் காலம் <-> மழைக்காலம்...) சளி வருவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். எப்படி இதிலிருந்து தப்பிப்பது? பருவக்கால மாற்றங்களின் போது சுடு தண்ணி குடிங்க இதனால் சளி உங்களை பிடிப்பது தவிர்க்கப்படும். பெரும்பாலான நோய்கள் தண்ணீர் வழியாதான் பரவுது அதனால எப்பவும் சுடு தண்ணி குடிப்பது மிகவும் நல்லது. பிசுலரி தண்ணியை விட சுட வைத்த தண்ணியால் நோய்கள் வராது என உறுதியாக கூறலாம்.

சளி பிடிச்சிருச்சு மூக்குல இருந்து சளி தண்ணியா ஒழுகுது அதை நிறுத்த மருத்துவர் டானிக் கொடுத்திருப்பாரு. டானிக்க குடிச்சா நல்ல தூக்கம் வரும்  டானிக்க விடுங்க சளிக்குன்னு மாத்திரை தின்னாலும் நல்ல தூக்கம் வரும் ஏன்னு உங்களுக்கு தெரியுமா?

ஏன்னா அதில் சிறிதளவு சாராயம் கலந்திருக்கு. மாத்திரையில் எப்படி சாராயம் கலந்திருக்குமுன்னு கேட்டா அதில் ஆல்ககால் (alcohol) கலந்த  பொருட்கள் கலந்திருக்கும். அப்பொருட்களை வச்சி தான் மாத்திரையே தயாரிப்பாங்க. பெரும்பாலான மருந்துகளில் ஆல்ககால் (alcohol) கலந்திருக்கும். அளவு வேணா கூட குறைய இருக்கலாம்.

மருத்துவர பார்த்து மருந்து வாங்கி சளி போகறத விட குவாட்டர் நெப்போலியன் பிராந்தி வாங்கி குடிச்சா சளி உங்க பக்கமே வராது. (குழந்தைகளுக்கு இந்த மருந்து வேண்டாம்)

நெப்பொலியன் அல்லது VSOP அல்லது மானிட்டர் அல்லது உங்களுக்கு பிடித்த ஏதோ ஒரு பிராந்தி வாங்கி குடிங்க சளி இல்லாம மகிழ்ச்சியா இருங்க.

ஒரு மூடி பிராந்திய உடல்நலிவுற்ற குழந்தைகளுக்கு சிலர்  ஊத்தி கொடுப்பாங்க (மருந்தாக) அப்படின்னு  நீங்க கேள்விப்பட்டிருப்பீங்கன்னு நினைக்கறேன்.


குறிப்பு:- பிராந்திக்கு உள்ள மருத்துவ குணம் விசுக்கிக்கு கிடையாது. இரம்மு, ஜின்னு எப்படின்னு தெரியாது ஆனா பிராந்திய நம்பலாம். பீரு, வைனு குடிச்சா சளி அதிகமாயிடும்.

திங்கள், மார்ச் 28, 2011

தொந்தியை குறைக்க யோகா மற்றும் உடற்பயிற்சி - II

போன இடுகைல எந்த யோகாசனம் செஞ்சா தொந்தி குறையும் என்று சொன்னேன். இப்ப எந்த மாதிரியான உடற்பயிற்சி செய்தா குறையுமுன்னு பார்க்கலாம்.

சுலபமான வழி தான். தரையில் படுத்துக்குங்க. மெதுவா உங்க காலை மேல தூக்குங்க. முதுகு தரையில் இருக்க வேண்டும். காலை மடக்க கூடாது. கால் நேராக தான் இருக்க வேண்டும். நாம்மளால மடங்காம கால தூக்க முடியுமா? சரி சின்ன பயிற்சி செய்வோமே.

இரண்டு காலையும் மடக்கி தரையில் படுங்க. பின் வலது காலை மட்டும் நேராக நீட்டவும் 10 வினாடி இருக்கவும் பின் வலது காலை பழைய நிலைக்கு கொண்டுவரவும். பின் இடது காலை நேராக நீட்டவும் 10 வினாடி இருக்கவும் பின் இடது காலை பழைய நிலைக்கு கொண்டுவரவும், 5 முறை இவ்வாறு செய்யவும்.  (கீழ் இருக்கற படத்தை பாருங்க)

சரி கால் முட்டிய மடக்காம கால நேர முடியுது அடுத்து என்ன பண்றது? தரையில் படுங்க. பின் இரண்டு காலையும் தரையில் இருந்து முட்டி மடங்காம நேரா தூக்குங்க. (கீழ் இருக்கற படத்தை பாருங்க). எவ்வளவு உயரத்துக்கு? தரையில் கால் படாம இருக்கணும் அதான் அடிப்படை. 30 வினாடி அந்த நிலையிலேயே இருங்க.  நேரம் ஆக ஆக வயிறு இறுகும் உங்களால் காலை தூக்குனாப்பல வைச்சிருக்க முடியாது. 10, 15, ...., 60 வினாடின்னு நேரத்தை அதிகரிச்சுக்கலாம். நேரத்தை அதிகரிக்க முயற்சி பண்ணுங்க. 5 முறை இப்படி பண்ணுங்க. குட்டி ஒன்னு உடற்பயிற்சி செய்யவது மாதிரி படம் இருக்கு பாருங்க அதை முடிந்தவர்கள் முயற்சி செய்யலாம்.








கையை தூக்கலாமா? தூக்கலாம். கால முட்டி மடங்காம நேரா தூக்கனும் என்பது தான் அடிப்படை.  கையை கீழ் இருக்கும் படத்தின் படி தூக்கலாம் கையை மேல தூக்கும் போது தலை தூக்கியிருக்க வேண்டும். கை கால் தூக்கப்பட்ட நிலையில் 30 வினாடி இருங்கள். 10, 15, ...., 60 வினாடின்னு நேரத்தை அதிகரிச்சுக்கலாம். நேரத்தை அதிகரிக்க முயற்சி பண்ணுங்க. 5 முறை இப்படி பண்ணுங்க.


கையை அப்படியே வைச்சிருக்கறதா? அது ஒரு முறை மற்றொரு முறையில் கையை ஆட்டலாம். கீழ் இருக்கும் படத்தை பாருங்க. அது மாதிரியாட நிலையில் இருந்து கொண்டு கையை கீழையும் பின் சிறிது மேலையும் தூக்கவேண்டும். ஆனா கால்?? எந்த நிலைக்கு கை போனாலும் கால்நிலை மட்டும் மாற கூடாது.  முடியலையே அப்படிங்கீங்களா? உங்களுக்கு சலுகை உண்டு. தமிழ் நாட்டுல இருந்து கிட்டு இலவசம் சலுகை இல்லாமலா? இஃகி இஃகி. அதாவது அடிப்படை என்பது கால் முட்டி மடங்காம நேரா தூக்கனும் என்பது இல்லையா? கைய ஆட்டறது எல்லாம் கால் நேரா இருக்கறப்ப ஏதாவது பண்ணனுமேனு தான் இஃகி இஃகி.






இன்னொரு வழி இருக்கு ஆனா இது தொப்பையை குறைக்க மேலுள்ள வழியை போல் விரைவாக வேலை செய்யாது. ஆனா காவல் காரர் மாதிரியான கெட்டி தொப்பைகளுக்கு உரியவர்கள் இதை செய்யலாம் இஃகி. அதை அடுத்த இடுகையில் பார்க்கலாம்.

புதன், மார்ச் 23, 2011

தொந்தியை குறைக்க யோகா மற்றும் உடற்பயிற்சி - 1

நான் தொந்திய குறைச்சு அனுப இடுகை போடலாம்ன்னு இருந்தேன். என் தொந்தி குறையற வழியை காணாம். நேரப்பற்றாக்குறை இஃகி இஃகி. அதனால குறைக்கும் வழிமுறைகளை சொல்லறேன்.

முதல்ல யோகா.
பத்மாசனம் தெரியுமில்ல??  அது இப்படி தான் இருக்கும்.தியானம் பண்ணுபவர்கள் அமரக்கூடிய  ஆசனம்.






செய்யும் வழி முறை


முதல்ல வலது காலை தூக்கி இடது தொடையின் மீது போடனும் பின் இடது காலை தூக்கி வலது தொடையின் மீது போடனும்.

கடினமா இருக்கா. பத்மாசனத்துக்கு நம்மை பழக்கப்படுத்த  முதல்ல நாம ஆர்தரா பத்மாசனம் பண்ணுவோம்.


ஆர்தரா பத்மாசனம்

வலது காலை தூக்கி இடது தொடை மீது போடுவோம். இடது கால் அப்படியே இருக்கட்டும். 5 நிமிடம் இந்த நிலையிலேயே இருங்க. பின் இயல் நிலைக்கு வந்துவிட்டு இடது காலை தூக்கி வலது தொடை மீது போடுங்க. அந்த நிலையில் 5 நிமிடம் இருங்க. 5 நிமிடம் என்றது நமக்காக தான்.15 வினாடி, 30 வினாடி, 1 நிமிடம் என்று அதிகரித்து கொள்ளவும். சில நாட்கள் இந்த நிலைகளை முயன்று விட்டு பத்மாசனத்தை முயன்று பாருங்க. முடியலையா? ஆர்தரா ஆசனத்தை சில நாள் தொடருங்க பின் பத்மாசனத்தை முயன்று பாருங்க. முயற்சி செய்துக்கிட்டே இருந்தா பத்மாசனம் கைக்குள்ள (கால்குள்ள) வந்துரும்.

பத்மாசனம் 5 நிமிடம் செய்யும் திறன் வந்தவுடன் உத்திட பத்மாசனம் செய்யலாம்.  இது தான் தொந்திய குறைக்கும் ஆசனம்.

பத்மாசனம் போட்டு அமர்ந்த பிறகு கையை கீழ் ஊன்றி மேல் எழ வேண்டும். அது தான் உத்திட பத்மாசனம். கை மட்டும் தான் நிலத்தை தொட்டுக்கிட்டு இருக்கவேண்டும். இந்த நிலையில் 1 நிமிடம் இருக்கவும். 2, 5, 10, 15, ...வினாடிகள்ன்னு அதிகரிச்சுக்கலாம்.

இந்த ஆசனம் செய்து பாருங்க, உங்க வயிறு தானா உள்ள போகும். ஆசனம் பண்ணும் போதே வயிறு உள்வாங்கும். மூச்ச தம் கட்டி தான் இந்த ஆசனம் பண்ணமுடியும்.

குறிப்பு - சம்மனம் போட்டு உட்காரமுடியாதவர்கள் முதலில் சம்மனம் போட்டு உட்கார பழகவும். பின் மற்ற யோகாசனங்களை முயற்சிக்கலாம்.