செவ்வாய், டிசம்பர் 26, 2006

BMI தவறான முறை

உடல் பருத்து விட்டதாவென்று அறிய "Body Mass Index - BMI" என்ற அளவுகோலை பயன் படுத்துகின்றனர். இது சரியான முறையா என்று கேட்டால் இல்லை என்றே சொல்லவேண்டும். ஏன்? உயரத்தையும் எடையையும் வைத்துதான் BMI அளவை கணக்கிடுகிறார்கள். முக்கியமாக இவர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ள தவறியது பால் & வயது. இதன் காரணமாகவே BMI ஐ கணக்கில் எடுத்துக்கொள்ள கூடாது. ஆனால் உடல் ஊதி போய்விட்டதா என்பதை கண்டறிய BMI நாடும், நாடச்சொல்லும் மருத்துவர்களும் உடற்கூறு வல்லுனர்களுமே அதிகம்.

இந்த முறையை தவறென்று நான் கூறுவதற்கு காரணம்??

உயரம் 165 செ.மீ & எடை 65 கி.கி இதற்கான BMI 23.9

இது 22 வயது வாலிபன் & 40 வயது பெண், 70 வயது ஆண், 80 வயது பெண், 20 வயது இளைஞி எல்லோருக்கும் 23.9 என்ற அளவு பொதுவானது. இதை எவ்வாறு ஏற்றுக்கொள்வது?

ஒருவர் உடற்பயிற்சி செய்யாதவர் மற்றொருவர் கடினமாக உடற்பயிற்சி செய்பவர் இருவரின் உடல் அளவும் ஒன்று ( இடுப்பு, மார்பு ) ஆனால் உடற்பயிற்சி செய்பவரின் எடை உடற்பயிற்சி செய்யாதவரின் எடையை விட அதிகம். நல்ல உருண்டு திரண்ட சதையின் காரணமாக எடை கூடுதலாக இருக்கும் அதற்காக அவரை எடை அதிகமானவர் என்று கூறலாமா? இது போன்ற பல அடிப்படை தவறுகள் உள்ள முறையை எவ்வாறு எல்லோரும் அறிவியல் பூர்வமானது என்று பரிந்துரைக்கின்றனர் என்று எனக்கு விளங்கவில்லை.

இது நான் தமிழ்நெட் 99 விசை பலகையை பயன் படுத்தி எழுதும் பதிவு.

ஞாயிறு, நவம்பர் 12, 2006

புகை பழக்கத்தை விட ஒரு எளிய வழி

புகை பழக்கம் மோசமான பழக்கம் ஆனால் முயன்றால் அதிலிருந்து யாராலும் விடுபட முடியும். புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த ஒரு எளிய வழி உள்ளது. அதன் படி நடந்தால் புகை பழக்கத்துக்கு ஒரு பெரிய விடை கொடுக்கலாம். அப்படி என்ன வழி இருக்கு என்று கேட்கிறீர்களா? இதோ ...

1. இந்த பழக்கத்தை நிரந்தரமாக விட்டு விட வேண்டும் என்று எண்ணம் வேண்டும். இது தான் முதன்மையானது இது இல்லைன்னா புகை பிடிக்கும் பழக்கத்தை விடவே முடியாது.

2. புகை பிடிக்கும் போது ஒரு பெரிய மெதப்பு தோணும் அது பொய்யின்னு (மாயை) தெரிஞ்சுக்குங்க. ஆனா புற்று நோய் வர வாய்ப்பிருக்கு, இதை மனசுல போட்டுக்குங்க.

3. இனிமே புகை பிடிக்கக்கூடாதுன்னு முடிவு பண்ணியதும் இருக்கிற எல்லா சிகரெட்டையும் தூக்கி வீசிடனும். ஒன்னும் உங்கக்கிட்ட இருக்கக்கூடாது. தூக்கிப்போடறப்ப மனசுக்கு ரொம்ப வேதனையாதான் இருக்கும் :-( என்ன பண்றது பழக்கத்தை விடணுமே. சிகரெட்டின் பெருமை உணர்ந்து வாய சுடுற வரைக்கும் சிகரெட்டை இழுத்தத இங்கு நினைத்து கதறக்கூடாது. நாளையில் இருந்து பிடிக்கமாட்டேன் அப்படின்னு சொல்லிட்டு இன்னைக்கே இருக்கிற எல்லா சிகரெட்டையும் புகைக்காதிங்க. நிறைய பேர் அப்படி தான் செய்வாங்க , நாளைக்கு நாளைக்குன்னு சொல்லிக்கிட்டு இருப்பாங்க சிகரெட் புடிக்கிறத விட மாட்டாங்க, அவங்களுக்கு நாளைக்கு வரவே வராது.

4. புகைப்பதை நிறுத்தியாச்சுன்னு உங்க நண்பர்கள்கிட்ட சொல்லுங்க, உடனே சில நலம் விரும்பிகள் 555 வாங்கி பத்து மச்சின்னு சொல்லுவாங்க, சில பேர் பத்த வைத்தே கொடுப்பாங்க, அந்த சதியில் விழுந்துடாதிங்க. நினைச்சிப்பாருங்க வெறும் கோல்ட் பிளேக்/சிசர்/பீடி ஒன்னு குடுன்னு கேட்டப்போ குடுத்தாங்களா? இல்லையே! இப்ப என்ன கரிசனம்??? ( கொடுத்தாலும் அடுத்த நாளே கடன் காரன் மாதிரி உங்களை வாங்கி தர சொல்லிடுவாங்கல்ல)

5. நண்பர்கள் கூட போகும் போது அவர்கள் 1 பாக்கட் வாங்கி உங்கக்கிட்ட 1 சிகரெட் எடுத்துக்க சொல்லி நீட்டுவாங்க , பழக்கத்தில் எடுத்து பத்த வச்சிறாதீங்க. வேண்டாம்! சிகரெட்டை விட்டாச்சுன்னு சொல்லிடுங்க.

6. இப்படி பல பல தடைகளையும் மீறி வெற்றிகரமா ஒரு வாரம் சிகரெட் புகைக்காம இருந்திங்கன்னா உங்களை பாராட்டி ஒரு டம்ளர் பழரசம் அருந்துங்க, முடிந்தா உங்கள் நண்பர்களுக்கும் வாங்கி கொடுங்க.

7. ஒரு வாரம் கழித்து சிகரெட் பத்த வைக்க ஆசை வரும். ஒன்னு மட்டும் யாருக்கும் தெரியாம அப்படின்னு சொல்லிட்டு சிகெரெட்டை கையில் எடுக்காதிங்க. அப்புறம் விட முடியாது.

8. சில சமயம் அடுத்தவர்கள் சிகரெட் புகைப்பதை பார்த்தா ரெண்டு இழுப்பு இழுக்க தோனும் இந்த மாதிரியான நேரங்கள் தான் மிக முக்கியமானது. இது ஒரு 4 அல்லது 5 நிமிடங்களுக்கு இருக்கும், இந்த நேரத்தில் மனதை வேறு திசையில் செலுத்தி புகைக்கும் எண்ணம் தோன்றாமல் பார்த்துக்கொள்ளுங்கள். டீ, காபி, பழரசம் குடிங்கள் அல்லது புகைக்கிற ஆளை திட்டுங்கள் ( மனசுக்குள் தான் ) அந்த 5 நிமிடம் போய் விட்டால் புகைக்கும் எண்ணமும் போய் விடும்.

9. புகை பிடிக்காம 1 மாசம் ஓட்டிட்டீங்கன்னு வைங்க உங்களை நீங்களே பாராட்டி 1 பழரசம் குடிங்க, முடிந்தா உங்கள் நண்பர்களுக்கும் வாங்கி கொடுங்க.

10. இதே மாதிரி ஒரு 3 மாசம் ஓட்டுங்க., உங்களை பாராட்டி 1 பழரசம் குடிங்க. காசு இருந்தா நண்பர்களுக்கு வாங்கி கொடுங்க. ஆனா பழரசம் குடிக்கற பழக்கத்தை விடாம தொடருங்க.

11. உங்களால புகைக்காம இருக்க முடியும்ன்னு தெரிஞ்சி போச்சு, அப்புறம் என்ன புகை பழக்கத்துக்கு பெரிய கும்பிடு தான். உங்களுக்கு வாழ்த்துக்கள்.

12. அப்புறம் மறக்காம புகை பிடிக்கும் உங்க நண்பர்களை திருந்த சொல்லுங்க.

ஞாயிறு, அக்டோபர் 22, 2006

குடிமக்களுக்கு ஒரு சேதி.

பெருங்குடி மற்றும் சிறுங்குடி மக்களுக்கு ஒரு முக்கியமான சேதி.

நமக்கு தலைவலி, பல்வலி, உடம்புவலி வந்தால் மருத்துவரிடம் செல்லாமல் நாமே ஆஸ்பரின் போன்ற வலி நிவாரணி எடுத்துக்கொள்வோம். நமக்கும் உடனடி நிவாரணம் கிடைக்கும். இது தவறில்லை. ஆனால் சில சமயம் நம் மக்கள் வலி நிவாரணத்துடன் ஒரு 2 பெக் சரக்கையும் உள்ளே தள்ளுவார்கள் நிம்மதியாக தூங்க. அது பீர், ஒயின், பிராந்தி, விஸ்கி, ரம் , ஜின் என்று ஆளுக்கு தகுந்தாற் போல் மாறும். இது கொஞ்சமும் நல்லதல்ல.

வலி நிவாரணியுடன் ஆல்கஹால் கலக்கும் போது நமது உடம்புக்கு பல புதிய தொல்லைகள் வரும் எனவே வலி நிவாரணி எடுக்கும் போது உள்நாட்டு அல்லது வெளிநாட்டு சாராயத்தை குடிக்காதிர்கள். சாராயத்தை ஊத்தி வலி நிவாரணம் பெறுவதாக இருந்தால் வலி நிவாரண மாத்திரைகளை உட்கொள்ளாதிர்கள். கவனம் தேவை.

கீழுள்ள அட்டவணை எந்தவகையான வலி நிவாரணியுடன் ஆல்கஹால் கலந்தால் எந்த வகையான நோய் வரும் என்று தெரியப்படுத்தும்.

Pain Reliver Risk ( When Mixed with Alcohol )>
*Acetaminophen (Tylenol) *sk of liver damage
*Aspirin and other nonsteerodial, anti-infammatory drugs ( Bayer, Exedrin) *Risk of gastrointestinal problems, bleeding and ulcers; risj of high blood pressure.
*Muscle relaxers (skelaxin) *Risk of seizures , drowsiness and breathing problems.
*Narcotics ( Percocet, Vicodin) *Risk of drowsiness, confusion and breathing problems.

திங்கள், ஜூலை 17, 2006

சிகுன்குன்யா காய்ச்சல்- சில குறிப்புகள்

தற்போது சேலம், நாமக்கல், தர்மபுரி மாவட்ட மக்கள் அரண்டு போய் இருப்பது "சிகுன்குன்யா" (Chikungunya) காய்ச்சலால். "சிகுன்குன்யா" டெங்கு போன்ற காய்ச்சல் நோய் வகையை சேர்ந்தது. இதற்கு இது வரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை, இது ஒரு உயிர் கொல்லி நோய் இல்லை என்பது ஆறுதல் அளிக்கும் செய்தி. ஆனா இது உயிரை எடுக்காது என்பதற்கு உத்தரவாதம் இல்லை :-(. இந்நோய் தாக்கினால் ஒரு வாரம் கழித்து சரியாகிவிடும். ஆனால் அந்த ஒரு வாரம் வேதனையை அனுபவித்தே ஆகவேண்டும். இதற்கு மருந்து இல்லை என்பதால் மருத்துவரிடம் செல்லாமல் இருக்கக்கூடாது, மருத்துவரிடம் செல்லுங்கள் அவர் சில தேவையான சிகிச்சைகளை குடுத்து இந்நோயின் தீவிரம் அதிகமாகாமல் பார்த்துக்கொள்வார். இந்நோய் குணமாக நல்ல ஓய்வு தேவை அதனால் வேலைக்கு செல்வதை மறந்துவிடுங்கள். குணமான பின்பும் இதன் தாக்கம் வெகுநாட்களுக்கு இருக்கும் முக்கியமாக மூட்டு தொடர்பான தொந்தரவுகள்.

அறிகுறிகள்:

காய்ச்சல், தலைவலி, உடம்பில் (தோல்) தடிப்பு, மூட்டுகளில் வலி, வெளிச்சத்தை கண்டு வெறுப்பு, வாந்தி. குறிப்பாக காய்ச்சல், மூட்டு வலி அதிகம் இருக்கும். மூட்டு வலியால் சில மக்களால் நடக்கக்கூட முடியாது, காலின் எடை பல மடங்கு கூடியது போல் இருக்கும்.

இது ஒரு தொற்று நோயா?

பரவலாக ஒரு பகுதியில் உள்ள மக்களுக்கு இந்நோய் பரவுவதால் (கொள்ளை நோய் போல) இது தொற்று நோய் என்று நினைக்க தோன்றும் ஆனால் இது தொற்று நோய் அல்ல. மனிதரிடம் இருந்து மனிதருக்கு பரவாது.

பின் எப்படி இது பரவுகிறது?

மலேரியா, டெங்கு போன்ற காய்ச்சல் நோய்களை கொடுக்கும் சாவா வரம் பெற்ற "கொசு"க்களின் மூலமே இந்நோய் பரவுகிறது. நோய் கண்ட மனிதரை கடித்த கொசு அடுத்த மனிதரை கடிக்கும் போது நோய் பரவுகிறது. சிகுன்குன்யா கிருமி தாங்கிய கொசு கடித்தால் நமக்கு நோயின் அறிகுறி தெரிய 1 - 12 நாட்கள் ஆகலாம்.

நோயை எப்படி கண்டு கொள்வது?

சிகுன்குன்யாவின் அறிகுறிகளும் டெங்குவின் அறிகுறிகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்கும் அதனால் இரத்தப்பரிசோதனை மூலமே நோயால் தாக்கப்பட்டதை உறுதிபட அறிய முடியும். குறிப்பாக டெங்கு காய்ச்சல் உள்ள பகுதிகளில் இரத்தப்பரிசோதனை அவசியம்.

எப்படி இந்நோயை கட்டுபடுத்துவது?
  • கொசுவை துரத்திவிட்டால் இந்நோயை துரத்திவிடலாம்.
  • சுற்றுப்புறத்தை கொசுக்கள் இல்லாமல் வைத்துக்கொள்வது மிக மிக மிக முக்கியம். நகராட்சி, ஊராட்சி அமைப்புகளிடம் சொல்லி கொசு புகை அடிக்க சொல்லுங்க.
  • கொசு விரட்டியை பயன் படுத்தவும்.
  • முழு கால் சட்டை , முழு கை சட்டையை அணியவும் ( கொசு கடியில் இருந்து தப்பதான் ) இது குறைந்த அளவு பாதுகாப்பை அளிக்கும்.
  • வீடு மற்றும் தெருவில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளவும். ( வீட்டை மற்றும் பார்த்துக்கொண்டால் போதாது)
  • வீட்டைச் சுற்றி செடிகள் இருந்தால் கொசுக்கள் வருவதற்கான வாய்ப்பு அதிகம், அதனால் மிக கவனமாக இருக்க வேண்டும். பட்டாசுகளில் இருந்து வரும் புகை கொசுக்களை தூர விரட்டிவிடும் என்பது நான் கண்டது.
  • சத்துள்ள உணவுகளை உட்கொள்ளுங்கள். நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ளுங்கள் அதற்கு வைட்டமின் சி உள்ள உணவுகளை ( நெல்லிக்காய், ஆரஞ்சு, மாம்பழம்)அதிகம் உட்கொள்ளுங்கள்.
  • கொசுக்கள் உள்ள பகுதிகளுக்கு செல்லாதீர்.
  • கொசுக்களை கவரும் உணவு பொருட்களை தவிர்க்கவும்.
  • இனிப்பு (சர்க்கரை) உணவுகள் கொசுவை கவர்பவை என்வே அவற்றை தவிர்க்கவும். இனிப்பு சாப்பிட்டவர்களை கொசு அதிகம் மொய்க்கும்.
  • வாழைப்பழம் சாப்பிடுவதை தவிர்க்கவும். கொசுவுக்கு வாழைப்பழம் பிடித்த உணவு. வாழைப்பழ தோலில் கொசு மொய்ப்பதை நீங்கள் கண்டிருப்பீர்கள், எங்கிருந்து தான் அத்தனை கொசுக்கள் வருமோ?
  • காலையில் ஒரு வைட்டமின் B 1 மாத்திரையை உட்கொள்ளுங்கள். அது நம் உடம்பில் இருந்து ஒரு வகையான வாசனையை வெளியேற்றும் அது கொசுக்களுக்கு பிடிக்காது அதனால் கொசு உங்களை கண்டால் 100 அடி தூர விலகி பறக்கும். :-) மனிதருக்கு அவ்வாசனை தெரியாது அதனால் கவலைப்படவேண்டாம் ;-)
  • சில இடத்தில் தேங்கி இருக்கும் தண்ணீரை வெளியேற்ற முடியாது என்ற சூழ்நிலை வந்தால் ( திறந்தவெளி தண்ணி தொட்டி) சில சொட்டு வேப்பெண்ணையை அத்தண்ணீரில் ஊற்றவும். இது கொசு முட்டைபொறிப்பதை தடுக்கும்.
  • கொசுவை விரட்ட என்னன்ன வழிகள் உள்ளனவோ அத்தனையையும் பயன்டுத்தி கொசுவை விரட்டி "சிகுன்குன்யா" வராமல் வாழுங்கள். இநத செய்தியை பக்கத்து வீட்டுக்காரரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள் ( அங்க கொசு இருந்தாலும் நமக்கு பாதிப்பு வரும் )

ஞாயிறு, ஜூன் 11, 2006

உங்களுக்கு கொழுப்பு அதிகமா?

குறும்பு பண்றவங்கள , தெனாவட்டா திரியரவங்கள பார்த்து உனக்கு கொழுப்பு அதிகமாயிடுச்சு என்று சொல்வது உண்டு. ரொம்ப குறும்பு பண்ணுனா ( ரொம்ப கொழுப்பு) குறும்பு பண்ற ஆளுக்கு நல்லதில்லை. அது போலவே ரொம்ப கொழுப்பு இருந்ததென்றால் உடம்புக்கு நல்லதில்லை.

கொழுப்பில் நல்ல கொழுப்பு கெட்ட கொழுப்பு என்று 2 வகை உண்டு. நல்ல கொழுப்பு அதிகமாகவும் கெட்ட கொழுப்பு குறைவாகவும் இருந்தா தான் உடலுக்கு நல்லது.

நல்ல கொழுப்பை HDL என்றும் கெட்ட கொழுப்பை LDL என்றும் சொல்வார்கள்.

ஏன் LDL ஐ கெட்டதுன்னு சொல்றாங்க?

நிறைய LDL கொழுப்பு இரத்தத்தில் கலந்து இருந்தா அது இரத்தக் குழாய்களின் உள் சுவரில் படிந்து இரத்ததின் போக்கை தடை செய்யும். இந்த படிமனானது எளிதில் கரையாதது. இது குறுகிய இரத்தக்குழாயில் உருவானால் ஆபத்து அதிகம். மாரடைப்பு, பக்க வாதம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதயத்துக்கும் செல்லும் இரத்தம் தடைபட்டா மாரடைப்பு, மூளைக்கு செல்லும் இரத்தம் தடைபட்டா பக்க வாதம். LDL அதிகமா இருந்தா ஆபத்து.

உப்பு தண்ணி குழாயில் எப்படி உப்பானது கத்தியால வெட்டகூட முடியாத அளவுக்கு படியுதோ அது மாதிரி கெட்ட கொழுப்பு இரத்தக்குழாயில் படியும்.

HDL ஐ ஏன் நல்ல கொழுப்புன்னு சொல்றாங்க?

இது இரத்தக்குழாயில் படியும் கொழுப்பு படிமனை நீக்குகிறது/கரைகிறது, அவ்வாறு கரைத்த கொழுப்பை ஈரலுக்கு கொண்டு சென்று சுத்திகரிக்கிறது. அதனால் இரத்தக்குழாயில் கொழுப்பு படிமம் உருவாவது மட்டுபடுத்தப்படுகிறது. அதனால் இதயத்திலிருந்து வெளி செல்லும் இரத்தம் தடைபடாமல் செல்ல வழி செய்து மாரடைப்பு வராமல் நம்மை பாதுகாக்கிறது. HDL குறைவா இருந்தா ஆபத்து.

Triglycerides - ட்ரைகிளிசரைட்

இது இன்னொருவகையான கொழுப்பு. இது அதிகமானால் நல்ல கொழுப்பின் அளவு குறைந்துவிடும். இந்த வகையில் இது நமக்கு கெடுதல் செய்கிறது. இந்த வகை கொழுப்பை நாம் உணவு மூலமாகவும் பெறுகிறோம் நம் உடலும் உற்பத்தி செய்கிறது. சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு இது அதிகமாக இருக்க வாய்ப்புண்டு.

நம் உடம்பில் கெட்ட கொழுப்பு அதிகரிக்க என்ன காரணம்?

1. கொழுப்பெடுத்த குடும்பத்தில் பிறந்தால் கொழுப்பு இல்லாம என்ன செய்யும்? ( சும்மா கிண்டலு ). அதாவது மரபு வழி காரணமாக சிலருக்கு அதிக கொழுப்பு இருக்கும்.
2. குண்டாக இருப்பது நல்ல கொழுப்பை குறைத்து கெட்ட கொழுப்பை அதிகரிக்க செய்யும்.
3. சோம்பேறியாக இருப்பது நல்ல கொழுப்பை குறைத்து கெட்ட கொழுப்பை அதிகரிக்க செய்யும்
4. வயது ஆக ஆக கொழுப்பு அதிகரிக்கும். (20 வயதிலிருந்து -- கல்லை தின்னாலும் செறிக்கிற வயசு முடிஞ்சிபோச் :-( )
5. உணவு பழக்கங்கள் - கொழுப்பு அதிகமாக உள்ள உணவை உட்கொள்வதினால் கொழுப்பு அதிகரிக்கும். (சுவையா இருக்கேன்னு பஜ்ஜி, வடை, பூரி போன்ற எண்ணெய் பலகாராங்களை உட்கொள்ளாதீர்கள்)
6. பால் - மாதவிலக்கு சுழற்சி முடிந்த பெண்களுக்கு அவர்கள் வயதையொத்த ஆண்களை விட கொழுப்பு அதிகமாகவும், மாதவிலக்கு சுழற்சி முடியாவிட்டால் அவர்கள் வயதையொத்த ஆண்களை விட கொழுப்பு குறைவாகவும் இருக்கும். அதாவது வயதான பெண்கள் & எல்லா ஆண்கள் கவனமாக இருக்க வேண்டும்.
7. Type 2 சர்க்கரை நோய் (diabetes) HDL அளவை குறைக்கும்.

கெட்ட கொழுப்பை குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்க சில வழிகள்.

1. சரியான உணவு பழக்கங்கள்.
2. உடற்பயிற்சி.
3. மது, புகை பழக்கத்தை தவிர்த்தல்.

எந்தவகையான உணவு நல்லது?

1. சோயாவை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள்.
2. முட்டையின் கருவை முற்றாக தவிர்த்துவிடுங்கள்.
3. மீன் வகைகளை சேர்த்துக்கொள்ளுங்கள். கர்பிணிகளும், பாலூட்டும் தாய்மார்களும் மீனை தவிர்க்கவும்.
4. சர்க்கரையை சேர்த்துக்கொள்வதை குறைத்துக் கொள்ளவும். இது ட்ரைகிளிசரைடை (Triglycerides) குறைக்க உதவும்.
5. நிறைய காய் கறிகளும் பழங்களும் உட்கொள்ளுங்கள்.
6. கொழுப்புள்ள உணவு பக்கம் தலை வைத்து கூட படுக்காதீர்கள்.
7. கார்போஹைட்ரேட் உள்ள உணவை அதிகம் உட்கொள்ளாதீர்கள். அதாவது அரிசியை குறைவாகவும் காய் கறிகளை அதிகமாகவும் சாப்பிடுங்கள்.
8. புரத சத்து அதிகம் உள்ள உணவை சேர்த்துக்கொள்ளுங்கள்.
9. நிறைய ஆரஞ்சு (சாத்துக்குடி) பழ சாறு உட்கொள்ளுங்கள். இது நல்ல கொழுப்பை அதிகரிக்கும்.
10. வெங்காயம் சேர்த்துக்கொள்ளுங்கள். இது நல்ல கொழுப்பை அதிகரிக்கும்.
11. பாதாம், நிலக்கடலை, காளான் உட்கொள்ளுங்கள். இது நல்ல கொழுப்பை அதிகரிக்கும். பாதாம் மிகச் சிறந்தது.

எவ்வகையான உடற்பயிற்சி செய்யலாம்?

வேக நடை, நடை ஓட்டம் (jogging), சைக்கிள் ஓட்டுவது. வாரத்திற்கு 3 நாட்கள் 45 நிமிடம் உடற்பயிற்சி செய்யுங்கள். உடற்பயிற்சியினை தவறாமல் செய்யுங்கள் அது மிக முக்கியம்.

புகை பிடிக்கும் பழக்கம் இருந்தால் அதை அடியோடு விட்டு விடுங்கள். புகையானது இரத்த நாளங்களின் சுவர்களை பாதித்து கெட்ட கொழுப்பு படிவதற்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கிறது. புகை பழக்கத்தை நிறுத்தினால் நல்ல கொழுப்பு நிறைய சேரும்.

குடியை விட முடியாமல் தவிக்கிறீங்கள சரி ரெட் வைன் அளவோட குடியுங்கள், மற்றவைக்கு தடா & பொடா தான்.

சமிக்கைகள் & அறிகுறிகள்:-

கொழுப்பு அதிகமா இல்லையா என்பதை கண்டறிய இரத்தப் பரிசோதனை ஒன்றே வழி. அதனால் குறைந்தது ஆண்டுக்கு ஒரு முறை இரத்தப் பரிசோதனை செய்து கொழுப்பின் அளவை அறிந்து கொள்ளுங்கள்.


கீழுள்ள இந்த அட்டவணை எந்த கொழுப்பு எவ்வளவு இருந்தா நல்லது கெட்டது என்ற குறிப்பை தருகிறது.

மொத்த கொழுப்பு (HDL + LDL)
சிறந்த அளவு>200 mg/dL க்கும் கீழே
எச்சரிக்கை அளவு200-239 mg/dL
அபாயகரமான அளவு240 mg/dL க்கும் மேலே
நல்ல கொழுப்பு
சிறந்த அளவு >60mg/dL க்கும் மேலே
நல்ல அளவு40-59 mg/dL
அபாயகரமான அளவு40 mg/dL க்கும் கீழே
கெட்ட கொழுப்பு
சிறந்த அளவு >100 mg/dL க்கும் கீழே
நல்ல (பாதிப்பில்லா)அளவு100-129 mg/dL
ஆபத்தான அளவு130-189 mg/dL
அபாயகரமான அளவு190mg/dL க்கும் மேலே
Triglycerides
சிறந்த அளவு>150 mg/dL க்கும் கீழே
எச்சரிக்கை அளவு150-199 mg/dL
ஆபத்தான அளவு200-499 mg/dL
அபாயகரமான அளவு500 mg/dL க்கும் மேலே

HDL - High-density lipoproteins
LDL - Low density lipoproteins

சனி, ஜூன் 10, 2006

மதுமிதாவின் ஆய்வுக்காக

வலைப்பதிவர் பெயர்: குறும்பன்
வலைப்பூ பெயர் : நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் & எண்ணச்சிதறல்கள்
சுட்டி(url) : (எத்தனை வலைப்பூக்கள் இருந்தாலும் அனைத்தையும் ஒரே பதிவில் அளிக்கலாம்) http://nalamnaadu.blogspot.com/
http://kurumban.blogspot.com/
< ஊர்: மன்னிக்க இரகசியம் :-)
நாடு: இந்தியா தற்போது அமெரிக்கா
வலைப்பூ அறிமுகம் செய்தவர்: சுயம்பு அதாவது நானே கண்டுக்கிட்டது :-))
முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : நவம்பர் 02, 2005
இது எத்தனையாவது பதிவு: 14
இப்பதிவின் சுட்டி(url): http://nalamnaadu.blogspot.com/2006/06/blog-post.html
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: என் நண்பனுக்கு பின்னூட்டம் இடுவதற்காக ஆரம்பித்தேன், கற்பு குஷ்புவின் பிரச்சனையில் மாலனின் கருத்துக்கு எனக்கு சரியாகபடாததால் முதல் பதிவு அவரின் கருத்தை வைத்து பதித்தேன் இவ்வகையில் மாலனே என்னை முதல் பதிவு போட காரணமானவர்.
சந்தித்த அனுபவங்கள்: சொல்லிக்கொள்ளும் படி இல்லை.
பெற்ற நண்பர்கள்: அந்த அளவுக்கு இன்னும் எழுதலை. என் நண்பனுக்கே நான் யாருன்னு தெரியாது ( இரகசியம் காக்கிறேன் :-) )
கற்றவை: தமிழ்மணம் திரட்டி மூலம் நிறைய மக்களின் எழுத்துக்களை படிக்கமுடிகிறது, சில மிகவும் பயன் உள்ளவை.
எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: இது என்ன அலுவலகமா மேலாலருக்கு தகுந்தபடி/பிடிச்சபடி , அலுவலக நடைமுறைக்கு தகுந்தபடி எழுத? இது என் தளம் என்ன வேண்டுமென்றாலும் எழுதலாம். நானே ராசா நானே மந்திரி :-)
இனி செய்ய நினைப்பவை: நிறைய எழுதனும்.
உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு: இன்னும் அந்த அளவு பெரிய ஆளாகவில்லை.