திங்கள், ஆகஸ்ட் 01, 2011

சளி தொல்லையில் இருந்து விடுபட

சளி பிடிக்காத மனிதனே இல்லை. குறிப்பா பருவக்கால மாற்றங்களின் போது (அதாவது கோடை காலம் <-> குளிர் காலம் <-> மழைக்காலம்...) சளி வருவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். எப்படி இதிலிருந்து தப்பிப்பது? பருவக்கால மாற்றங்களின் போது சுடு தண்ணி குடிங்க இதனால் சளி உங்களை பிடிப்பது தவிர்க்கப்படும். பெரும்பாலான நோய்கள் தண்ணீர் வழியாதான் பரவுது அதனால எப்பவும் சுடு தண்ணி குடிப்பது மிகவும் நல்லது. பிசுலரி தண்ணியை விட சுட வைத்த தண்ணியால் நோய்கள் வராது என உறுதியாக கூறலாம்.

சளி பிடிச்சிருச்சு மூக்குல இருந்து சளி தண்ணியா ஒழுகுது அதை நிறுத்த மருத்துவர் டானிக் கொடுத்திருப்பாரு. டானிக்க குடிச்சா நல்ல தூக்கம் வரும்  டானிக்க விடுங்க சளிக்குன்னு மாத்திரை தின்னாலும் நல்ல தூக்கம் வரும் ஏன்னு உங்களுக்கு தெரியுமா?

ஏன்னா அதில் சிறிதளவு சாராயம் கலந்திருக்கு. மாத்திரையில் எப்படி சாராயம் கலந்திருக்குமுன்னு கேட்டா அதில் ஆல்ககால் (alcohol) கலந்த  பொருட்கள் கலந்திருக்கும். அப்பொருட்களை வச்சி தான் மாத்திரையே தயாரிப்பாங்க. பெரும்பாலான மருந்துகளில் ஆல்ககால் (alcohol) கலந்திருக்கும். அளவு வேணா கூட குறைய இருக்கலாம்.

மருத்துவர பார்த்து மருந்து வாங்கி சளி போகறத விட குவாட்டர் நெப்போலியன் பிராந்தி வாங்கி குடிச்சா சளி உங்க பக்கமே வராது. (குழந்தைகளுக்கு இந்த மருந்து வேண்டாம்)

நெப்பொலியன் அல்லது VSOP அல்லது மானிட்டர் அல்லது உங்களுக்கு பிடித்த ஏதோ ஒரு பிராந்தி வாங்கி குடிங்க சளி இல்லாம மகிழ்ச்சியா இருங்க.

ஒரு மூடி பிராந்திய உடல்நலிவுற்ற குழந்தைகளுக்கு சிலர்  ஊத்தி கொடுப்பாங்க (மருந்தாக) அப்படின்னு  நீங்க கேள்விப்பட்டிருப்பீங்கன்னு நினைக்கறேன்.


குறிப்பு:- பிராந்திக்கு உள்ள மருத்துவ குணம் விசுக்கிக்கு கிடையாது. இரம்மு, ஜின்னு எப்படின்னு தெரியாது ஆனா பிராந்திய நம்பலாம். பீரு, வைனு குடிச்சா சளி அதிகமாயிடும்.

கருத்துகள் இல்லை: