செவ்வாய், நவம்பர் 07, 2017

கபாலபதி மூச்சுப் பயிற்சி



சம்மணம் போட்டு முதுகை நேராக வைத்துக்கொண்டு உட்காரவும் கூன் போட்டு உட்காரதீர்கள். எப்படி வேண்டுமென்றாலும் உங்கள் வசதிப்படி உட்காரலாம் .ஆனால் முதுகை நேராக வைத்துக்கொண்டு உட்காரவும். மெதுவாக மூச்சை உள்ளிழுக்கவும் பின் விசையாக அதாவது முடிந்த அளவு வேகமாக வெளிவிடவும்.  இது தான் கபாலபதி இது மாறாது. விசையுடன் மூச்சை வெளியிடும் போது தலை ஆடக்கூடாது அடிவயிறு உள்போகலாம் நெஞ்சு ஆடலாம்.

நான்கைந்து முறை நன்றாக மூச்சை இழுத்து விடவும் பின்பு இயல்பாக ஒரு நிமிடம் மூச்சு விடவும். மெதுவாக மூச்சை உள்ளிழுக்கவும் பின் விசையாக
அதாவது முடிந்த அளவு வேகமாக வெளிவிடவும் இதே மாதிரி 5 நிமிடங்களுக்கு செய்யவும். பின்பு 1 நிமிடம் இயல்பாக மூச்சு விடவும் பின்பு 5 நிமிடங்கள்  கபாலபதி செய்யவும் பின்பு 1 நிமிடம் இயல்பாக மூச்சு விடவும் பின்பு 5 நிமிடங்கள் கபாலபதி செய்யவும்

வேறு முறை
நாசி சுத்தி முத்திரை
நாடி சுத்தி முறையில் செய்வது. அதாவது இடது மூக்கில் மெதுவாக மூச்சை உள்ளிழுத்து வலது மூக்கில் விசையாக மூச்சை வெளியிடுவது. பின்பு வலது 
மூக்கில் மெதுவாக மூச்சை உள்ளிழுத்து  இடது மூக்கில் விசையாக மூச்சை வெளியிடுவது, இது மாதிரி மாற்றி மாற்றி 5 நிமிடங்கள் செய்து பின் 1 நிமிடம்  ஓய்வெடுத்து பின் 5 நிமிடம் செய்யனும். 1 நிமிட ஓய்வுக்கு பின் மீண்டும் 5 நிமிடம் செய்யவும். (இது சிறப்பான முறை ஏன்னா 2 நாசியும் தூய்மையாகும்)

வேறு முறை
இடது மூக்கை\ஓட்டையை மூடிக்கொள்ளவும் வலது மூக்கில்\ஓட்டையில் மூச்சை மெதுவாக மூச்சை உள்ளிழுக்கவும் பின் விசையாக அதாவது முடிந்த அளவு  வேகமாக வெளிவிடவும்ர 5 நிமிடங்கள் செய்யவும். இதே மாதிரி மூன்று சுற்றுகள் செய்யவும்.

வேறு முறை
வலது மூக்கை\ஓட்டையை மூடிக்கொள்ளவும் இடது மூக்கில்\ஓட்டையில் மூச்சை மெதுவாக மூச்சை உள்ளிழுக்கவும் பின் விசையாக அதாவது முடிந்த அளவு  வேகமாக வெளிவிடவும்ர 5 நிமிடங்கள் செய்யவும். இதே மாதிரி மூன்று சுற்றுகள் செய்யவும்.

யாரெல்லாம் செய்யக்கூடாது?
வலிப்பு உள்ளவர்கள், வெர்டிகோ உள்ளவர்கள், இரத்த அழுத்தம் உள்ளவர்கள், மாதாவிடாய் கால பெண்கள், கருவுற்ற பெண்கள், இதய நோய் உள்ளவர்கள், பக்க வாதம் உள்ளவர்கள், குடல் இறக்கம் உள்ளவர்கள். செய்யும் போது தலை சுற்றினாலோ, தலை வலித்தாலோ செய்வதை நிறுத்திவிடவும், இரு நாட்களுக்கு இதேமாதிரி செய்யும் போது நிகழ்ந்தால் மருத்துவரை பார்க்கவும்.

பலன்
இதை செய்யும் போது சளி இருந்தால் அது வந்து விடும் அதனால் கபாலபதி செய்யப்படும் போது கைக்குட்டையை வைத்துக்கொள்ளவும். இதை செய்தால்  தூக்கம் பறந்து விடும். அதனால் இரவில் செய்தால் தூக்கம் வருவது தள்ளி போகும். மூளை சுறுசுறுப்பு அடையும். இதை செய்து விட்டு நாடி சுத்தி மூச்சு  பயிற்சியை செய்யவும். ஏன்னா மூக்கின் ஓட்டைகள் இதனால் சளி இல்லாமல் தூய்மையாக இருக்கும் காற்று(மூச்சு) எளிதாக போய் வரும்






திங்கள், அக்டோபர் 23, 2017

இரத்தக்கட்டுக்கு நாட்டு மருத்துவம்


இரத்தக்கட்டுக்கு நான் பார்த்த நாட்டு மருத்துவர் புளியங் கொட்டையும் புண்ணாக்கையும் இரத்தக்கட்டு உள்ள இடத்தில் வைத்து கட்ட சொன்னார்.

என்னடா ஆளு ஆளுக்கு மாற்றி மாற்றி சொல்றாறேன்னு நினைத்தேன். இரண்டும் கேட்கும் என்று ஒருவர் கூறினார்.

சிந்தித்து பார்த்ததில் இரத்தக்கட்டு சமீபத்தில் ஏற்பட்டது  என்றால் புளியங்கொட்டையை மாவையும் நாள் பட்டது என்றால் புண்ணாக்கை அப்ப சொன்னதையும் தெரிந்து  கொண்டேன்.

தண்ணியை கொதிக்க வைத்து அதில் தூளான புளியங்கொட்டையை போட்டு மாவாக்கி  இரத்தக்கட்டு உள்ள இடத்தில் அப்பனும்.

ஒரு அக்கா இரத்தக்கட்டுக்கு மைதா மாவை  குழைத்து அப்ப சொன்னார்.

புளியங்கொட்டை மாவு, புண்ணாக்கு, மைதா மாவு கெட்டிச் சாறு என்று ஏதோ ஒன்றை பயன்படுத்தி இரத்தக்கட்டிலிருந்து விடுபடுவீர்களாக.